செவ்வாய், 21 ஜூலை, 2015

ஒளிப்படக் கலை ஓர் அறிமுகம் - பகுதி 3

தொடர்ச்சி....

                     அந்த இரு ஆய்வாளர்களும் ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்தனர். 1831 ல் டாகரே “வெள்ளி அயடேட்” பொருத்தமான பொருள் என்று அறிந்தார். இச்சமயத்தில் நைசோபர் நீப்ஸ், பெட்டிக் காமிராவினை திருத்தி அது பயனுள்ள பொருள் என பலரும் சொல்லும்படி செய்தார்.  அதன் திருத்தங்கள் பின்வருமாறு...
                    இந்த காமிரா அழகான நீண்ட பெட்டியாக இருந்தது. பின்பக்கம் விழக்கூடிய தட்டிலிருந்து லென்ஸ் வரையிலும் ஆறு அங்குல நீளம் உடையதாக இருந்தது. பின்னர் லென்சை ஒரு குழலில் பொறுத்தினார். பிம்பம் தெளிவாக விழும்வரை நீளத்தினை சரி செய்து கொள்ளலாம். எல்லாவிதமான தடங்கல்கள் கிராமங்கள், அனைத்தையும் பட்டபின் வெற்றிபெற வாய்ப்பு வந்த வேளையில் நைசோபர் நீப்ஸ் மரணமடைந்தார்!

                         எனினும் தொடர்ந்து டாகரே ஆய்வுகளை மேற்கொண்டார். தொடர்ந்து 4 ஆண்டுகள் கடுமையாக ஆராய்ந்ததன் பலனாக கி.பி.1837ல் அந்த நிகழ்வு தற்செயலாக நடந்தது. நிழற்படம் விழவேண்டிய தட்டுக்களில் சில போதுமான நேரம் கழித்து திறந்தபோது அவைகள் வெளிச்சத்தினை தொடாமலேயே இருந்தது. எனவே அவை கெட்டுப்போய்விட்டதாக கருதி அலமாரி ஒன்றில் போட்டுவைத்தார். ஒரு சில வாரங்கள் கழித்தபிறகு அவற்றை கழுவி மீண்டும் பயன்படுத்தலாம் என வெளியில் எடுத்தபோது அவர் ஏற்கனவே எடுத்திருந்த படங்கள் தெளிவாக பதிவாகிஇருந்தது. 

                         ஆச்சர்யத்தில் மூழ்கிய அவர் அந்த அலமாரியை தீவிரமாக சோதனை செய்தார். அப்போது பாட்டிலில் இருந்த பாதரசம் உடைந்து சிதறியிருப்பதை கண்டார். அவருக்கு உண்மை விளங்கிற்று. “வெள்ளி அயடைட்”  புசப்பட்ட தட்டு ஒன்றில் ஒரு படத்தினை எடுக்கச் செய்து பின் இருட்டறையில் பாதரசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூடேற்றினார். அதிலிருந்து பாதரச ஆவி கிளம்பியது. அந்த ஆவியை தட்டின் மீது பரவச் செய்தார். உடனே அவர் எடுத்த படம் தெளிவாக விளங்கியது. பின்னர் வெள்ளி உப்புக்களை கழுவி எடுக்க “சோடியம் சல்பேட்” என்ற திரவத்தில் முக்கி எடுத்தார். இப்போது படம் பளிச்சென மின்னியது. இந்த முறையில் ஒளிப்படம் எடுப்பதற்கு “டாகரியா டைப்” என்று பெயர் சூட்டப்பட்டது!

                             புகழ்பெற்ற பௌதிக அறிஞராகவும், வானவியல் நிபுணராகவும், விஞ்ஞான கழக செயலாளராகவும் பிரான்காப்ஸ் அரோகர் என்பவர் இருந்தார். அவரது முன்னிலையில் தனது கண்டுபிடிப்பை விளக்கிக்கூறி அதனை செயல்படுத்திக் காட்டினார் டாகரே. அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது கண்டுபிடிப்பை இந்த உலகிற்கு பரிசாக வழங்கினார். இதனால் பிரான்ஸ் நகரம் பெருமைக்குள்ளானது. பிரான்ஸ் நாடாளுமன்றம் இவருக்கும் இவரின் மறைந்த நண்பர் நைசோபர் நீப்ஸிற்கும் நன்றி தெரிவித்தது. அது மட்டுமின்றி டாகரேவிற்கும், நீப்ஸின் மகனிற்கும் ஓய்வுதியத்தொகை வழங்கி சிறப்பித்தது. 

                     டாகரியா டைப் படங்களினால் மக்கள் பைத்தியங்களைப்போல மாறினர். தங்கள் ஒளிப்படத்திற்காக அரைமணி நேரம் வரை வெயிலில் உட்கார்ந்திருந்தனர். டாகரே கேமராவை 1840ல் முதன் முதலாக போஸ்டன் நகரைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் பயன்படுத்தினார். 1839 ல் பிரான்ஸ் நாடு முழவதும் மக்கள் பைத்தியங்களைப்போல நடந்து கொண்டனர். தங்களின் உருவங்களை தாங்களே பார்த்து மகிழ்ந்தனர். இந்த சமயத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது.

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக