சனி, 25 ஜூலை, 2015

ஒளிப்படக் கலை ஓர் அறிமுகம் - பகுதி 5

தொடர்ச்சி....
                     “மிசன்பார்க்” என்ற ஜெர்மானியரும் “ஸ்கீமடல்” என்பவரும் சேர்ந்து  இந்த செய்தித்தாள்களை உருவாக்கினர்  என்பது தெரியவருகிறது. இம்மாதிரி புகைப்படச் செய்தித்தாளின் அமைப்பு மாறுபட்டதாக காணப்பட்டது. சம்பவங்களை படம் எடுத்துக்கொண்டு பிறகு அப்படங்களை பிளாக் செய்து கொண்டனர். அந்த பிளாக்குகளை செய்தித்தாள்களில் அச்சிட்டு வெளியிட்டனர். முதன்முதலாக “கிரிமியாவில்” நடைபெற்ற போர் நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன. 

                     இந்த படங்களை “ரோஜர் பெண்டர்” என்பவர் எடுத்தார். 1870 முதல் 1871 வரை பாரீஸ் முற்றுகையிடப்பட்டது. அப்போது அங்குள்ள செய்திகளை அனுப்ப வினோத முறை கண்டறியப்பட்டது. செய்திகள் கையால் எழுதப்பட்டு பின்னர் புகைப்படமாக்கப்பட்ட பின் படங்கள் சிறு சிறு பதக்கங்களில் அச்சிடப்பட்டது. அவைகள் புறாவின் கால்களில் கட்டப்பட்டு உரிய இடத்தில் சேர்க்கப்பட்டன.

                      முன்பு புகைப்படம் எடுப்பது மிகவும் சிக்கலான செயலாக இருந்தது. இந்நிலை மாற ஆங்கிலேயர் இருவர் உறுதிகொண்டனர். அவர்கள் பலவித சோதனைகளை மேற்கொண்டனர். ஈரமில்லாமல் மிக விரைவில் படமெடுக்கக்கூடிய பிளேட்டுகளை உருவாக்கினர். அந்த பிளேட்டுகள் மீது ஒருவித பசை கொண்டு வெள்ளி புரோமைட்டுகளாலான உப்புக்களை ஒட்டினர். இதனால் புகைப்படம் எடுப்பதில் பெரும் சிரமங்கள் குறைந்தன. அதனால் புகைப்படக் கலையும் விரைந்து வளர்ந்தது. அந்த பிளேட்டுகளை கண்டறிந்தவர்கள் ஆர்.எல். மாடோக்ஸ், ஸர் ஜோசப் வில்சன் வான் ஆகியோராவர்.

                    இந்த பிளேட்டுகள் “வரண்ட் பிளேட்டுகள்” எனப்பட்டன. 1856ல் ஒளியினை ஏற்கக்கூடிய பசைப்பொருள் ஒன்றினை செய்வதன் மூலம் அடிப்படைப் பொருளாக கண்ணாடிக்குப்பதில் வேறு ஏதாவது ஒன்றினை செய்ய முயன்றது. 

                      பர்மிங்காம் என்ற நகரில் அப்போது இரசாயன அறிஞர் ஒருவர் இருந்தார். அவர் “அலெக்சாண்டர் ஃபாக்ஸ்” . இவரின் தீவிர முயற்சியால் “செல்லுலாய்ட்” என்ற பொருளை கண்டறிந்தார். அது பிளாஸ்டிக்கின் ஒரு வகைப்பட்டதாகும்.

                         அமெரிக்காவைச் சார்ந்த “ஜார்ஜ் ஈஸ்ட்மென்” என்பவர் இந்த செல்லுலாய்டைப் பயன்படுத்தி போட்டோ எடுக்கப்படும் பிலிமை செய்யமுடியுமா என கண்டறிந்தார். அவரது முயற்சி வெற்றிபெற்றது. 1891 ல் “ஈஸ்ட்மெனும்”, அவரது நண்பர் “ஹன்னிபால் குட்விலும்” இணைந்து செல்லுலாய்ட் பிலிமை கண்டறிந்தனர். 

                          பகல் வெளிச்சத்திலேயே காமிராவுக்குள் இந்த பிலிமை் சுருளை உபயோகித்து படம் எடுக்கும் முறை துவங்கிற்று. இதனால் புகைப்படக் கலை மேலும் விரைந்து பரவிற்று!

                         இதனால் பலரும் பயன்படுத்தும் வகையில் ஈஸ்ட்மென் ஒரு கேமராவை கண்டறிந்தார். அது சிறு அளவில்“பெட்டிக்கேமரா”  . அதன் பின்னர் வந்த பல பெட்டிக் கேமராக்களில் நவீன வசதிகளுடன் குறிப்பிடத்தக்கது “லெய்கா” கேமராவாகும். இதில் 35 மிமீ அளவுள்ள பிலிமைப் பயன்படுத்தினர். இதில் பலவண்ண  ஒளியேற்பு பசைப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. இதன்பின் இயற்கையின் வண்ணங்களில் உள்ள கருப்பு வெள்ளை துல்லியமாகவும், அற்புதமாகவும் படம்பிடித்தது. அந்த கேமரா 1920 ல் முறையாக விற்பனைக்கு வந்தது. அச்சமயம் வெளிச்சம் புகமுடியாத இடத்திலும் படமெடுக்க தயாராக புதியதாக “பிளாஷ்கள்“ கண்டுபிடிக்கப்பட்டன.

                   இதிலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்தது. வெளிச்சத்தை வாரி இறைக்கும் வகையில் ரசாயணப் பொடி எரிக்கப்பட்டது. அது எரியும்போது புகையும், துர் நாற்றமும் வீசியது. அந்த ஒளி கண்களை கூசச் செய்தது. இது 1880 வரையிலும் தொடர்ந்தது. லென்சினை மூடித்திறக்க புதுவகை விரைவுக் கபாடம் “ஷட்டர்” ஒன்று கேமராவில் அமைக்கப்பட்டது. மேலும் எடுத்த படத்தினை பெரிதாக்க மலிவு விலையில் பல சாதனங்கள் கிடைத்தன. மேலும் பல நவீன கேமராக்கள் தோன்றலாயின. இவ்வகை கேமராவில் படத்தெளிவின் நிமித்தம் லென்சை சரி செய்தல், வெளிச்சம் புகக்கூடிய துவாரத்தின் அமைப்பை சரி செய்தல் ஷட்டர் மூடித்திறக்கும் நேரத்தை  சரி செய்தல் போன்ற அனைத்தையும் ஒரே சமயத்தில் தானாகவே சரிசெய்யக்கூடிய விசைக்கட்டுப்பாடு உள்ள கேமராக்கள் தோன்றிவிட்டன. இந்த கேமராக்களில் உள்ள ஒரே ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் போதும் எல்லாம் தானாகவும்சரியாகிவிடும்.

தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக