செவ்வாய், 28 ஜூலை, 2015

ஒளிப்படக் கலை ஓர் அறிமுகம் - பகுதி 6

தொடர்ச்சி....
                        இவற்றைத்தவிர போதிய வெளிச்சம் இல்லையெனில் அவ்வெளிச்சத்தை உண்டாக்கி படமெடுக்க பிளாஸ்கள் உருவாகின. 1930 ல் புகைப்படக்கலை முன்னேறிவருவதற்கான சான்றாக ஒரே நொடியில் படமெடுத்து தானே கழுவி பிரிண்ட்போட்டு வெளியில் தள்ளும் கேமராக்கள் உருவாகின. இது மாபெரும் சாதனையாகும். இதனை கண்டுபிடித்தவர் “டாக்டர். எட்வின்ட் லாண்ட்” . அமெரிக்காவை சார்ந்த இவரின் கண்டுபிடிப்பை புகைப்படக் கலைஞர்கள் விரும்பவில்லை. ஏனெனில் இவரது கண்டுபிடிப்பில் படத்தை மறுபிரதி எடுக்க முடியாது. பிலிமை பயன்படுத்தி படம் எடுத்தால் நெகடிவ் மூலம் எவ்வளவு பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

                     டாக்டர். ஹெரால்டு.இ. எட்கெர்ட் என்பவர் நவீன கேமராவை உருவாக்கினார். இது கடலின் ஆழத்தில் சென்று படம் எடுக்க உதவியது. இது அட்லாண்டிக் கடலின் மிக ஆழமான பள்ளம் எனப்படும் “ரேமாஞ்ச்” பள்ளத்தில் படமெடுக்க பயன்பட்டது. இப்பள்ளம் 24600 அடி ஆழம் கொண்டது. இந்த பள்ளத்தில் எலக்ட்ராணிக் மின் ஒளி உதவியுடன் கடலுடைய கடினமான இருளை வகிர்ந்து கொண்டு கேமரா இறங்கியது.

                        அக்கேமராவின் லென்ஸ் பருமன் கிட்டத்தட்ட 1 1/2 இன்ச் ஆகும். இந்த கேமரா அப்பள்ளத்தினை பல கோணங்களில் படம் எடுத்தது. இருப்பினும் கடலின் ஆழத்தில் நீரின் அழுத்தத்தை தாக்குபிடிக்கமுடியாமல் அந்த கேமரா லென்ஸ் சுக்கலாக நொறுங்கியது. எனினும் அதிர்ஸ்ட வசமாக கேமராவுக்குள்  தண்ணீர்புகவில்லை. அது பெரும் நன்மையை விளைவித்தது. அதே சமயம் வானக்கோள்களை படமெடுக்கும் நவீன கேமராக்கள் உருவாகின. 1955 ல் முப்பரிமானப் புகைப்படம் எடுக்கும் முறையை “சர்க்கார்ஸ் பீட்ஸ்டோன்” என்பார். அறிமுகப்படுத்தினார். இதனை “ஸ்டீரியா ஸ்கோப்” என கூறினர். இவ்வாறான கேமராவில் மனித கண்கள் போல இரண்டு லென்ஸ்கள் இருந்தன. இம்முறையினை “ஹாலோகிராபி” என அழைத்தனர். 

                    இன்று அதிநவீன கேமராக்கள் வந்து உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கேமரா இன்று பலரது கைகளில் அற்புதமாக நடனமாடுகின்றன. இது டிஜிட்டல் தொழிநுட்பத்தின் புரட்சியாகும்!

இதுவரை கேமரா உருவாகிவந்த வரலாற்றை கண்டோம்...இனி அதன் பயன்கள் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக