வெள்ளி, 20 மே, 2011

ஒளிப்படக் கலை ஒரு அறிமுகம் - 2

தொடர்ச்சி....

அதன்பிறகு இக்கட்டதோடு சோதனை நின்று போனது . தாமஸ் விடாது பல சோதனைகள் செய்தார், இச்சோதனை பின்னாளில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி ரசாயனப் பொருள் பூசப்பட்ட காகிதத்தின் மேல் தாமஸ் வெட்ஜ் உட் சில இலைகளை வைத்து சோதனை செய்தார். இலை மூடபடாத பகுதி வெளிறிய கருப்பு நிறமாக மாறியது. அப்பகுதியில் மிகத் தெளிவான முறையில் வெண்மையான வண்ணத்தில் இலையின் தண்டும் நரம்புகளும் விழுந்தன .

1794 இல் ''காமெரா'' என்ற ஒன்றினை பயன்படுத்துவது குறித்து இவர் குறிப்பிட்டார் என்று சொல்லபடுகிறது.

மாவீரர் நெப்போலியனின் படை அதிகாரியான ''நைசொபர் நீப்ளின் '' அவர்களின் கண்டுபிடிப்பு . அவர் அறிவியல் ஆய்வில் மிக நாட்டமுடையவர் , கி.பி. 1814 இல் ஒளி பட்டவுடன் மாறுதல் அளிக்கும் சில ரசாயனப் பொருட்களை வைத்து சோதனை மேற்கொண்டார் . அவரின் சோதனைகளில் இரண்டு காரியம் பெரும் புகழ் பெற்றது , ஆனால் அவரின் பெயர் புகழடையவில்லை .
1. ''ஒளிப்படக் கலை'' - இச்சொல்லை தந்தது .
2. தொலைவிலுள்ள உருவங்களை தாள் ஒன்றின் மீது படமாக பிடிக்கப் படுவதற்கு ''இருட்டறை பெட்டி கேமரா'' என்ற ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்பதாகும் .

லியோனர்டா டாவின்சியின் தீர்க்க தரிசனம் :
உலகின் மிகச்சிறந்த ஓவியர்களுள் புகழ் மிக்கவர் இவர் . தமது கற்பனையில் , அளவிறந்த அறிவியல் கருவிகளை கண்டறிந்தார் . அவற்றை எப்படி செய்வது என்பது குறித்து அவர் திட்டவட்டமான ஒரு தீர்க்கத்தை தந்தார். மேலும் அக்கருவிகளை குறித்து தன் புத்தகத்தில் குறித்து வைத்தார்.
உட்பக்கம் இருளாக இருக்கும் பெட்டி ஒன்றில் சிறு துளையிட்டு அத்துளை வழியாக ஒளிக்கதிர்கள் செல்கையில் ஒளியானது நுழைவதற்கு எதிரில் உள்ள காட்சியுடைய சின்னஞ்சிறு தலைகீழ் பிம்பமானது எதிர்புறத்தில் விழுகின்றது. என்பது அறியப்பட்டது . காமெராவின் அடிப்படைத் தத்துவமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

துறவி ஜான் கண்டறிந்த உண்மை:
இவ்விதமான இருள் பெட்டியினுள் துளையில் வெறும் துளையாக விட்டுவிடாமல் கண்ணாடி வில்லை ( லென்ஸ்) ஒன்றை பொறுத்தி சோதனை செய்தார் . இச்சோதனையில் பிம்பம் நேராக தெளிவாக விழுந்தது.

ரகசியக் கேமரா :
கேமரா கண்டுபிடிக்கும் முன்பே கி.பி.1569 இல் ரகசியக் கேமரா ஒன்று இருந்ததாக சொல்லபடுகிறது. இது வீட்டினுள் இருந்து பிறர் காணாத வண்ணம் வெளியில் நடப்பவற்றை நாம் காட்சிகளாக பார்க்கலாம் . இதன் மாதிரி ஒன்று ''எடின்பெர்க்'' மலைகோட்டையில் உள்ள அருங்க்காட்சியகதிலே உள்ளது.
இந்த காமெராவை ''கியாம் பெட்டிஷ்டா டெல்லா போர்டா'' என்ற புவியியல் அறிஞர் கண்டறிந்தார் . இக் காமெரா குவி லென்சுடன் கூடிய ஓட்டையானது பெட்டியின் மேல் பக்கத்தில் உள்ளது. இதற்கு மேல் அடித்தளமிட்டதற்கு சுமார் 45 டிகிரி கோணத்தில் இருக்கும்படி ஒரு லென்சானது பொருத்தப்பட்டுள்ளது. இப்படி லென்ஸ் வைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒளிக்கதிர்களானவை செங்குத்தான முறையில் பிரதிபலிக்கபடுகிறது. தெருவின் பிம்பம் பெரிதாய் உள்ள வட்ட வெண்மை நிற மேசையின் மீது விழுவது போல அமைக்கப் பட்டிருந்தது. இக் கேமரா அந்நாளில் வீட்டை விட்டு வெளிவராத பெண்களுக்காக அமைக்கப் பட்டதாகும் .

நைசொபர் நீப்சின் தீவிர ஆய்வு :
இவர் ஒரு அறிவியல் ஆய்வாளர் அல்ல. எனினும் ஆய்வுகளில் நாட்டம் கொண்டவர் . இவர் காமெராவில் ஒளிக் கதிர்களை பிடித்து நிறுத்தக் கூடிய வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டார் . இருள் பெட்டியான காமெராவின் மூலம் வரக் கூடிய ஒளிக்கதிர்களை பிடித்து நிறுத்துவதால் பிம்பம் விழக்கூடிய இடத்திலே அவர் கைக்கு கிடைத்த பல பொருட்களை வைத்து சோதனை செய்தார் . இச்சோதனையில் 'தார் வார்னிஷ் ' பெரிதும் பயன்படும் என கண்டறியப் பட்டது. தார் மிக நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருக்குமானால் வெளிச்சம் பட்ட பகுதி தாவர எண்ணையில் கரையக் கூடியதாக மாறிவிடும் . தார் பூசிய தட்டுகளிலே பிம்பமானது போதுமான அளவு வரை விழும்படி செய்தார். பின் இதர பகுதிகளை செதுக்கி எடுத்து விட்டு அச்சாக அதனை அடித்தார். கோடு போன்ற படம் உருவானதே தவிர தெளிவான படம் கிடைக்கவில்லை . இது மிகவும் கடின வேலையாகவும் இருந்தது.

நட்பு :
இப்பிரச்சனையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் . இதே நேரத்தில் இவருக்கும் ஜாகுவிஸ் மாண்டே டாகரே என்ற ஆய்வாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. இருவரும் சேர்ந்து இத்துறையில் ஆய்வு செய்தார் .கிடைக்கும் வருவாயினை சமமாக பகிர்ந்து கொள்வதென முடிவு செய்தனர். இதில் டாகரே வெள்ளி நைட்டுரேட் பயன்படுத்தி பல சோதனைகளை செய்தார் . ....

தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக