வெள்ளி, 24 ஜூலை, 2015

ஒளிப்படக் கலை ஓர் அறிமுகம் - பகுதி 4

தொடர்ச்சி.....

                    “வில்லியம் ஹென்றிபாக்ஸ் டால்போட்” என்ற ஆங்கிலேயர் மிகச்சிறந்த அறிவியல் நிபுணராக விளங்கினார். அவர் தமது இல்லத்திலேயே ஆய்வு மேற்கொண்டார். புகைப்படக் கலையில் “நெகடிவ், பாசிடிவ்” முறைகள் உள்ளன. அதை முதலில் கண்டறிந்து  கூறியவர் இவர்தான். நெகடிவ்- மூலப்பிரதி, பாசிடிவ்- நேர்ப்பிரதி இதனால் ஒளிப்படக்கலையில் ஓர் மாற்றம் உண்டானது.

                           டாகரே டைப்பில் ஒரு பெரும் குறை இருந்து வந்தது. அதாவது உலோக தட்டில் படம் நேரடியாக பதிவாகிறது. இதனால் நேர்ப்பிரதி மட்டும் கிடைக்கிறது. இதிலிருந்து வேறு பிரதிகள் பெற முடியாது. அதுபோல படத்தினை பெரிதாக்கவும் முடியாது.

விசேச ஏற்பாடு 
                      ஆனால் டால்போட்டு , வெள்ளையை கருப்பாகவும், கருப்பை வெள்ளையாகவும், மாற்றப்படுவதன் மூலம் அதன்பின் மூலப்பிரதி படத்தின் வழியாக சூரிய ஒளியினைச் செலுத்துவார். பின்னர் இரசாயணப்பொருள் தடவப்பட்டுள்ள வேறு காகிதத்தில் நேரான பிரதியைத் தயாரித்துவிடுவார். இந்நேரத்தில் பிரபல வானியல் நிபுணர் “சர் ஜான் ஹர்டில்” நேர்ப்பிரதியில் படங்கள் நிலைத்து நிற்க வேண்டுமெனில் “சோடாவுடைய ஹைப்போ சல்பைட்டை” உபயோகிக்க வேண்டுமென ஆலோசனை கூறினார். அதற்கிணங்க ஹைப்போ சல்பைட் பயன்படுத்தப்பட்டது. இநத முறையை “கேலோடைப்” என்றனர்.
                          டால்போட் இதனைக் கண்டறிய காரணம் இத்தாலியில் இயற்கை அமைப்பினை வரைபடமாக தயாரிப்பதன் நிமித்தம் ஒரு பயணம் மேற்கொண்டார். அப்போது இயற்கை வடிவங்களை காகிதம் ஒன்றில் பதிந்து நீண்ட காலம் நிலைத்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று சிந்தித்ததாகவும், அதன் வெளிப்பாடே “கேலோடைப்” என்றும் கூறினார்.

                     1841ல் அவர் தமது கண்டுபிடிப்பை உரிமைப்பதிவு செய்து கொண்டார். பிறகு ஒரு ஆண்டு கழித்து அவர் சிறப்பிக்கப்பட்டார். “ராயல் சொசைட்டி”யின் தங்கப்பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது. எனினும் டாகரே டைப் போல இது வேகமாகப் பரவவில்லை. பிரான்சிலும், வெளிநாடுகளிலும் டாகரேவின் மதிப்பு உயர்ந்து கொண்டே போனது. 1840 ல் டால்போட், கட்டிடங்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை புகைப்படம் எடுத்தார். அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார். அப்படியும் அவரது படைப்பு பிரபலமாகவில்லை. டாகரேயின் நண்பர் ஒருவரின் மருமகன் ஒருவர் மூலப்பிரதியின் மூலம் பிரதிகளைத் தயாரிக்க காகிதத்துக்குப் பதில் கண்ணாடி தகடுகளை பயன்படுத்தலாம் என யோசனை கூறினார். அவர் பெயர் “நீப்ஸ் டி. விக்டர்” . 1848ல் அவர் இவ்வித யோசனை கூறியபின் புகைப்படக்கலை புத்துயிர் பெற்றது. 

                          இதனால் ஓவியர்கள் பலர் அச்சமடைந்தனர். எனவே தாங்களும் காமிராக்களை வாங்கி பயப்படுத்தத் தொடங்கி தங்களின் தொழிலை மாற்றிக் கொண்டனர். அந்நாளில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஓவியராக  “டேவிட் ஆக்டேவியஸ் ஹில்” என்பவர் இருந்தார். பிரான்ஸில் “பிராங்பர்ட்” என்பவர் 1857ல் வில்லி என்ற இடத்தில் முதன் முதலாக ஓவியங்கள் வெளியீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார். மேலும் இவ்விருவரும் எடுத்த புகைப்படங்கள் இன்றும் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. 

                         1846ல் ஆங்கிலேய விஞ்ஞானி ஒருவர் காமிராவை வானியல் ஆய்வுக்கு உதவும் கருவியாக பயன்படுத்த ஆய்வு செய்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் புகைப்படக் கலை வானியல் ஆய்வில் புகுத்தப்பட்டது!

                                புகைப்படக்கலையில் புதுமையைப் புகுத்த முயன்ற பிரஞ்சு புகைப்படக் கலைஞர் ஒரு புதிய நவீனத்தைக் உருவாக்கினார். அவர்தான் “டிஸ்டேரி” அவர் புகைப்பட விசிடிங் கார்டுகளை தயாரித்தார். அவை மிகவும் புகழப்பட்டன. ஒரு நாளில் 1800 கார்டுகள் தயாரித்தார். இந்த கார்டுகளை மக்கள் பெரிதும் விரும்பினர்.
                     இந்த காமிராக்கள் எல்லாமே வருவதற்கு முன் 1840ல் உலோக காமிரா ஒன்று தயாரிக்கப்பட்டது. அதனை பிரான்ஸ்விக் என்ற ஊரைச் சார்ந்த “பிரடெரிக்” என்பவர் தயாரித்தார். இதில் லென்சானது 1:3:4 என்ற ஒளியை ஏற்கக்கூடியதாக இருந்தது. இதில் ஒளி புக வேண்டிய நேரம் 2லிருந்து 1 நிமிடமாக குறைந்தது. 1850-1860 (அ) 1860 -1870 க்குள் நிகழும் சம்பவங்களை படமெடுத்து செய்திகளை விற்கக்கூடிய “ செய்தித்தாள்கள்” புழக்கத்தில் வந்தது என தெரியவருகிறது. 

தொடரும்.......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக