
அன்புள்ளம் கொண்ட ஒளிப்படக் கலைஞர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் . முதலில் எனது குருநாதர் , குடும்ப நண்பர் திரு. செழியன் அவர்களுக்கு நன்றிகள்.
வெள்ளியணை என்ற சிற்றூரில் இருந்து வாழ்க்கை எனும் கால வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு புலம்பெயர்ந்த பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன் . இதோ இப்போது ஒரு ஒளிப்படக் கலைஞனாக உங்களில் ஒருவனாக இந்த கரூர் மண்ணில் வலம் வருகிறேன். வரலாற்றை பதிவு செய்பவர்கள் நாம் இன்னமும் ஒளிக்கு பின்னால் மங்கி கிடப்பது வேதனையானது. நமது திறன்களை வெளிஉலகிற்கு காட்டவும் தெரியாத பல தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ளவும், நம்மில் முன்னோடிகளின் இந்த துறை சார்ந்த கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் ஒரு தளம் தேவை. அதனை இந்த ஒளிப்பதிவு வலைபூ நிச்சயம் நிறைவேற்றும் என கூறிகொள்வதில் ஒரு மாணவனாக பெருமிதம் அடைகிறேன் .
எனது முயற்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கும் , நமது ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கும் நன்றிகள் .
முருகானந்தம் ,
ஓவியன் ,
ஒளிப்பட கலைஞன் ,
கருவூர்.
அழைக்க : 9843955627
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக