08.01.2016
கரூர்.
கரூரில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒளிப்படக் கலைஞர்கள் பயனடையும் வகையில் ஒருநாள் சிறப்பு பயிற்சி வகுப்பை கலைச்செம்மல் எம்.எஸ்.தேவசகாயம் நினைவு கலைகள் மற்றும் கைவினைகள் மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பயிற்சி பட்டறையினை, தேர்ந்த ஒளிப்படக்கலைஞர், திரு.உதயகுமார் ”கேமரா அப்ஸ்குரா கிளப்பின்” செயல்தலைவர் அவர்கள் நெறிப்படுத்த இருக்கிறார். ஆகையால் கரூர் மாவட்ட ஒளிப்பதிவாளர்களும், மாணவர்களும், ஆர்வலர்களும் பங்கு பெற்று பயனடைய வேண்டுகிறோம். இந்த பயிற்சி சிறப்பாக அமைய நமது வாழ்த்துக்கள்.